முழு நாடும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் நிமோனியாவின் பொதுவான வடிவமாக மாறியுள்ளது.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 'டொசிலிசுமாப்​' தடுப்பூசி இலங்கையில் கிடைக்கவில்லை என்று நெத் நியூஸ் தெரிவிக்கிறது.

சிங்கப்பூர் தடுப்பூசி வழங்க மறுத்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கம் தங்களது நாட்டுக்கு தடுப்பூசிகள் தேவைப்படுவதால் எந்த ஒரு தடுப்பூசியையும் ஏற்றுமதி செய்வதில்லை ​என முடிவு செய்துள்ளது.

இலங்கையில் தடுப்பூசிக்கு அதிக கிராக்கி இருக்கும் நேரத்தில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் 'டொசிலிசுமாப்​' தடுப்பூசி இலங்கையில் பெறமுடியாதுள்ளது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியை விரைவில் இறக்குமதி செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று 100 தடுப்பூசிகளையும், அடுத்த செவ்வாய்க்கிழமை மேலும் 100 தடுப்பூசிகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் மேலும் 600 தடுப்பூசிகளையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

கடுமையான கொரோனா இதய நோய் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் 'டொசிலிசுமாப்​'  என்ற தடுப்பூசிக்கு இலங்கையில் அதிக தேவை இருப்பதாகவும், தடுப்பூசிக்கு கருப்பு சந்தையை உருவாக்கியிருப்பதாகவும் நெத் நியூஸ் சமீபத்தில் முதன்முறையாக வெளிப்படுத்தியது. இந்த தடுப்பூசி ஒன்று, சுமார் ரூ .113,000 ஆக உள்ள போதிலும்  தற்போது உள்ளூர் கருப்பு சந்தையில் ரூ .800,000 முதல் ரூ .1000,000 லட்சம் வரை விற்கப்படுவது தெரியவந்துள்ளது.

'நெத் நியூஸ்' நடத்திய விசாரணையில், சுகாதார அதிகாரிகளுக்கு கூட கிடைக்காத இந்த தடுப்பூசிகள், இந்தியாவில் உள்ள நண்பர்கள் மூலமாக விமான கெப்டன்களால் நாட்டிற்கு கடத்தப்படுவது தெரியவந்துள்ளது.

நாட்டின் புகழ்பெற்ற சிரேஸ்ட வணிகருக்கு சமீபத்திய நாட்களில் இதுபோன்ற தடுப்பூசி வழங்கப்பட்டதாக 'நெத் நியூஸ்' தெரிவிக்கிறது.

நாட்டில் தடுப்பூசிகள் சரியாக கட்டுப்படுத்தப்படவில்லை அல்லது கண்காணிக்கப்படவில்லை என்று சிரேஸ்ட சுகாதார அதிகாரி ஒருவர் நெத் நியூஸிடம் கூறினார்.

யார் இலங்கையில் 'டொசிலிசுமா​' தடுப்பூசியின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தடுப்பூசி பற்றாக்குறையை வெளிப்படுத்தினார்.

நாடு முழுவதும் மிகவும் ஆபத்தான கொவிட் அலை வீசுகிறது கொரோனா வைரஸ் மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 'டொசிலிசுமாப்​' தடுப்பூசி பற்றாக்குறையால் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக 'மவ்பிம' செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி