இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடக்கப் போவதாக தூதுவராலயத்திற்கு தகவலளித்த குற்றத்திற்காக முன்னாள் விமானப்படை அதிகாரியொருவர் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளை (15) இந்திய சுதந்திரத் தினம் கொண்டாடப்படவிருப்பதால், இந்திய தூதுவராலயத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த இடமிருப்பதாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல்கள் கூறுகின்றன.

இந்த நபர் வழங்கிய எச்சரிக்கை மீது கொழும்பு காலி வீதியில் அமைந்துள்ள இந்தி தூதுவராலய அதிகாரியொருவரால் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் நேற்று பதியப்பட்ட முறைப்பாட்டிற்கேற்ப, கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கீர்த்தி ரத்நாயக என்ற முன்னாள் விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக செய்தியாளர் சிரேஷ்ட எஸ்.எஸ்.பி. சட்டத்தரணி அஜித் ரோஹன கூறுவதற்கேற்ப, பனாகொட பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்து இந்த சந்தேக நபர் விமானப்படையிலிருந்து விரட்டப்பட்டவராவார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி