முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பத்தேகம ஷமித தேரர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலமானார்.

மாத்தரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு 69 வயது.

பத்தேகம ஷமித தேரர் இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பௌத்த துறவியாவார்.

சில நாட்களுக்கு முன்பு காலி கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பத்தேகம ஷமித தேரர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்து விகாரையில் அவரது பணிகளைச் செய்து கொண்டிருந்தார்.

பின்னர் ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

லங்கா சம சமாஜ கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் ஒரு சமூக சேவையாளராக பெரும் சேவையாற்றிய புகழ்மிக்க தேரராவார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி