கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இரவு நேர களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த திங்கட்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொவிட் -19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில் இரவு நேர களியாட்ட நிகழ்வுகள் , விருந்துபசாரங்கள் உட்பட மக்கள் ஒன்றுகூடும் வகையிலான நிகழ்வுகளை தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் , இந்த சுற்று நிரூபத்திற்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனடிப்படையிலே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி