தேசிய நீர் வழங்கல் சபையினால் தெரனியகல கும்புருகம பிரதேசத்தில் நடைபெறும் நீர் வழங்கல் திட்டத்தில் 477 நீர் மீற்றர்கள் உட்பட உபகரணங்கள் திருடப்பட்டமை தொடர்பில் தெரணியகல பிரதேச சபையின் தலைவர் நேற்று (16) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகச் செய்தியாளர் அஜித் ரோஹன கூறுகிறார்.

திருட்டு தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் பின்பு திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 97 நீர் மீட்டர்கள் அவர் வசமிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரதேச சபைத் தலைவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி