பொலிஸாரின் துன்புறுத்தல்களை நிறுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

குற்ற வழக்குகள் கட்டளைச் சட்டக் கோவையில் சில திருத்தங்களை உள்ளடக்கிய வர்த்தமானியொன்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் கடந்த மாதம் வெளியிடப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் மாதத்திற்கு ஒரு முறை பொலிஸின் பொறுப்பிலுள்ள சந்தேக நபர்களை சந்தித்து அவர்கள் சம்பந்தமாக விசாரிக்க வேண்டுமெனவும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகிறது.

என்றாலும், இத்தகைய நடவடிக்கைகள் ஊடாக மாத்திரம் இலங்கை பொலிஸாரின் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த முடியாதெனவும் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இது விடயத்தில் நேரடியாக தலையிட வேண்டுமெனவும் மேற்படி அறிக்கை வலியுறுத்துகிறது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி