இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்களை அபகரிக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராட தமிழ் அரசியல் ஓரணியில் இணைந்துள்ளன.

யாழ்ப்பாணம் நல்லூர் இளைஞர் கலை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற ஒன்பது தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் யாழ்ப்பாண, பாதுகாப்புப் படையினரைத் தவிர, பிற அரசு நிறுவனங்களும், தனியார் ஒப்பந்தக்காரர்களும் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக கூடியிருந்தனர்.

நல்லூர் கலந்துரையாடலுக்குப் பிறகு சிங்கள ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், நில அபகரிப்பை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பாதுகாப்பு படையினர் மட்டுமல்ல, வனவிலங்கு, வன பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் துறை ஆகியவையும் நிலம் கையகப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனியார் நிலங்கள் சூறையாடப்படுவதாகவும், சிங்கள பௌத்தர்களை குடியமர்த்தி தமிழர்களை வெளியேற்ற சதி நடப்பதாகவும் அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டினர். 

"நாங்கள் அத்தகைய சூழ்நிலையின் விளிம்பில் இருக்கிறோம்" என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் கருத்து தெரிவிக்கையில் முன்பு தமிழர்கள் வசித்து வந்த நிலத்தில் சுமார் 40 சதவீதத்தை அரசாங்கம் ஆக்கிரமித்து வருவது மட்டுமல்லாமல், கடல் வளங்களையும் சூறையாடி வருகிறது.

சில பகுதிகளில் நில அபகரிப்புக்கு மேலதிகமாக பௌத்த விகாரைகள், கட்டப்படுவதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தொல்பொருள் இடங்களை பாதுகாப்பது என்பது புதிய விகாரைகளை கட்டுவதல்ல என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி