மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து  வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை  இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தி பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அதனை இடைநிறுத்துமாறு சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் பணிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அவசர தேவை ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பித்து, அவரது அனுமதியுடனேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வருபவர்களை சுயதனிமைப்படுத்த முடியும் எனவும் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி