முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள்
தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் இந்த விடயங்களை அறிக்கையிட்டதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அந்த வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த விசாரணை தொடர்பில் தற்போது வெளிநாட்டில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கடமையாற்றிய இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.