ஈரான்-இஸ்ரேல் போர்ச் சூழ்நிலை காரணமாக, பொதுமக்கள் மீது விதிக்கப்பட்ட ஒன்றுகூடல்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கான
தடையை விரைவாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
பல இஸ்ரேலிய விமான நிறுவனங்கள், டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச விமானங்களை ஆரம்பித்துள்ளதாக அதன் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
தற்போதைய நல்ல சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று (25) சர்வதேச விமான சேவைகள் வழக்கம் போல் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
போர் நிறுத்தத்தை தொடர இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் இருந்து நேற்று (24) புறப்பட்ட மூன்று இலங்கையர்கள், எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தின் ஊடாக கொழும்பு வந்தடைந்ததாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் தங்கள் விமான டிக்கெட்டுகள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு இஸ்ரேலுக்கு திரும்புமாறு தூதரகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விமான டிக்கெட்டுகளை பெற சில போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, டெல் அவிவ் நகருக்கான விமானங்கள் அல்லது இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் நிலை பற்றிய மேலதிக விவரங்களுக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்.
இதற்கிடையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, டெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலின் பின்னர், இஸ்ரேலிய பிரதமர் மேலும் தாக்குதல்களை நடத்தவில்லை என்று கூறியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்த விதிமுறைகளை இஸ்ரேல் கடைப்பிடித்தால் மட்டுமே போர் நிறுத்தத்தை கடைபிடிப்போம் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.