மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக, கட்டார் மற்றும் குவைட் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கன்

ஏர்லைன்ஸ் விமானங்கள், அந்நாடுகளுக்குச் செல்லாமல், இடைநடுவே மீண்டும் கொழும்புக்கு திரும்பியுள்ளன.

மேற்படி விமானங்கள் ஓமானில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிய பின்னர் நாட்டிற்குத் திரும்பியதாக, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்த வெளிநாட்டு பயணிகள் ஹோட்டல்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், இலங்கை பயணிகளை அவர்களது வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பாதுகாப்பு நிலைமையை மதிப்பாய்வு செய்த பிறகு, விமானங்களை மீண்டும் அந்நாடுகளுக்கு இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், டுபாய், அபுடாபி மற்றும் ரியாத் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் சிறிய தாமதங்களுக்குப் பிறகு அந்த நாடுகளில் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாகம் தெரிவித்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், மற்ற விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி