பொலிஸ் மா அதிபரின் உத்தரவுகள் அடங்கிய சுற்றறிக்கைகளை, வட்ஸ்அப் குழு மூலம் பொலிஸ் அல்லாத

பிற தரப்பினருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள், உயரதிகாரிகளின் முறையான அனுமதியின்றி, “CRTM/ RTM செய்தி எண் 3” என்ற வட்ஸ்அப் குழுவை, தனது தனிப்பட்ட தொலைபேசியில் பயன்படுத்தி வந்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் கூறுகிறது.

மேற்படி வட்ஸ்அப் குழுவில் ஈடுபட்டுள்ள பலர், பொலிஸ் துறையை அல்லாத பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் துறையின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கத் தவறியதன் மூலமும், பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்களை வெளியாட்களுக்குத் தெரியப்படுத்தியதன் மூலமும், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார் என்ற அடிப்படையில், அவரது ஒழுக்கக்கேடான நடத்தை காரணமாக, பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால் அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி