ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வு இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மனித உரிமைகள் பேரவை அமர்வு இதுவாகும்.
இதில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு நேற்று ஜெனீவா சென்றது.
மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, அதில் பங்கேற்கும் நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவும் அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
முந்தைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை எதிர்க்க அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இது தொடர்பில், கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.