முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாகக் கைது செய்யுமாறு,
பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடி இன்றுகாலை ஆராய்ந்தது. அதன் பின்னர் பாதுகாப்புச் செயலர் இந்த அறிவிப்பை சற்றுமுன்னர் விடுத்துள்ளார்.