குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) பிடியாணை பிறப்பித்தது.
மேற்படி வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது, பிரதிவாதியான திருமதி டயனா கமகே நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, பிடியாணை பிறப்பித்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்தது.