பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து

மொட்டு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு நேற்று பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விஜேராமாவில் உள்ள இல்லத்தில் கூடியது.

இதன்போது எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து பல சுற்று கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சஷீந்திர,

பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் மே தினம் குறித்து  விவாதித்தோம்,

உழைக்கும் மக்களாக மே தினத்தை கொண்டாட முடிவு செய்தோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சி.பி. ரத்நாயக்க ஆகியோர் கட்சி பிரதிநிதிகளிடம் இது குறித்து தெரிவித்ததாக கூறியுள்ளார்.

எனினும் எதிர்வரும், பிரதேச சபைத் தேர்தலில் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக போட்டியிட வேண்டும் என்பதே பெரும்பான்மையானவர்களின் கருத்து என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி