தற்போதைய அரசாங்கம், பாதுகாப்பு படைகளின் பிரதானி என்ற பதவியை தொடர்ந்துப் பேண,
அரசாங்கம நடவடிக்கை எடுக்காது என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியை தொடர்ந்து பேண எதிர்பார்க்கவில்லை. அது தொடர்பான பணிகளை பாதுகாப்பு அமைச்சகம் மூலம் மேற்கொள்வோம்" என்றார்.
முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஷவேந்திர சில்வாவே, பாதுகாப்புப் படைகளின் பிரதான பதவியை இறுதியாக வகித்திருந்தார்.
அவரது ஓய்வுக்குப் பின்னர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி என்ற அலுவலகம், அரசாங்கத்தால் இழுத்துப் பூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.