யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குவது தொடர்பான உண்மைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளக்கியுள்ளார்.

சம்பந்தப்பட்ட வழக்கில் யோஷித ராஜபக்ஷ இன்று வரை சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.

"யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பணமோசடி, சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இன்றுவரை, யோஷித இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை. உயர் நீதிமன்றத்தில் ஒரு நபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, அவரை சந்தேகநபராக அறிவித்து, அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவசியம். வாக்குமூலம் பெறுவதற்காக இந்த நபரை சந்தேகநபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதுதான் வழக்கமான நடைமுறை.

“பிணைச் சட்ட விதிகளின்படி, அவர் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்காவிட்டால் அல்லது நாட்டை விட்டு தப்பிச் சென்லாவிட்டால், சந்தேகநபருக்கு பிணை வழங்குவது இயல்பானது. யோஷிதவுக்கு எதிராக பணமோசடி வழக்கு தொடரப்பட்டதால், தேவையான நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த கைது செய்யப்பட்டது. பிணை வழங்குவது, அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அர்த்தமல்ல" என்று, அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி