கொழும்பு மாநகர சபைப் பகுதிக்கு தினமும் பத்தாயிரம் கிலோகிராம் மாட்டிறைச்சி

தேவைப்பட்டாலும், இந்த நாட்களில் விநியோகம் ஐந்தாயிரம் கிலோகிராமாக குறைக்கப்பட்டதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என தெரியவருகின்றது.

அறுவடை காலத்தில் மாடுகளின் தேவை இருப்பதால், கால்நடைகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம் என  கொழும்பு மாநகர சபையின் தலைமை மாநகர கால்நடை மருத்துவர் முகமது இஜாஸி தெரிவித்தார்.

அதற்காக கால்நடைகள் தேவைப்படுவதால், விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் மாட்டிறைச்சி நுகர்வு அதிகரிப்பதால், மாடுகளை இறைச்சிக்காக இப்போது அறுக்கப்படுவது குறைவு என்றும் மருத்துவர் தெரிவித்தார்.

ஆனால், இப்போதெல்லாம், ஒரு கிலோ மாட்டிறைச்சி  2,600 முதல் 2,700 ரூபா வரை விற்கப்படுகிறது.

மேலும் கொழும்பு மாநகர சபை பகுதிக்கு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் நூறு மாடுகள் தேவைப்படுகின்றன.

ஆனால் இப்போதெல்லாம், இந்தப் பகுதிக்கு சுமார் 50 பசுக்களின் இறைச்சிகள் நுகரப்படுவதாகவும் அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி