இலங்கைப் பிரஜைகளான தமிழ் இளைஞர்கள் பலர், சட்ட ரீதியாகவும் சட்டத்திற்கு
முரணான வகையிலும் வெளிநாட்டிற்கு செல்லும் போது வெளிநாட்டு முகவர்களால் ஏமாற்றப்படும் சம்பவங்கள் பல தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் பலர், ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாராளுமன்றில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த வெளிநாட்டு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கள் என்ற அடிப்படையில் இராஜதந்திர ரீதியாக அணுகி வரும் நிலையில், இதற்காக ஒருவார கால அவகாசம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.