டுபாய் நாட்டில் மறைந்திருக்கும் பாதாள உலகக் கும்பல்களிடையே உள்ள
போதைப்பொருள் வர்த்தகப் பிரச்சினைகள்தான், இந்நாட்டுக்குள் அடிக்கடி நடக்கும் பாதாள உலகக் கோஷ்டி துப்பாக்கிச் சூடுகளுக்கு முதன்மையான காரணம் என்று, புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
பாகிஸ்தானின் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தவறான தகவல்களை வழங்குவதன் மூலம், போதைப்பொருள் பெறுவதைத் தடுத்தல், டுபாய் விருந்துபசார நிகழ்வுகளில் இடம்பெறும் வாதப் பிரதிவாதங்கள், இலங்கை பாதுகாப்புத் தரப்பினருக்குத் தகவல் வழங்கல் மற்றும் பிரதேச ரீதியிலான தலைமைத்துவப் பிரச்சினைகள் காரணமாக, அவர்கள் டுபாயில் மோதல்களில் ஈடுபடாமல், அந்தக் கோபத்தை இலங்கையில் இருக்கும் தங்கள் சகாக்கள் மூலம் வெளிப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்தப் பிரச்சனைகள் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையிலான வெறுப்பை வெளிக்காட்டிக்கொள்ள, தங்களது பின்தொடர்பவர்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.