சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக
சிறிது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 76ஆவது வயதில், இன்று (19) உயரிழந்தார்.
விக்டர் ஐவன் அவர்கள், “ராவய” பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஆவார். ஜூன் 26, 1949இல் பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
அவர், ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் ஒரு போதகராக, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க கருத்தியல் தலையீடுகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.