பெண் பாராளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டிய
மூன்று பாராளுமன்ற ஊழியர்கள், அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட பாராளுமன்ற தொடர்புத்துறை, பல கட்ட விசாரணைகளை நடத்திய பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் எனக் கண்டறிந்ததாகக் கூறியது.
அதன்படி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன, கடந்த 9ஆம் திகதி இரவு மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய ஒப்புதல் அளித்தார்.