சுமார் 1,100 கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள் துறைமுகம் மற்றும் சுங்கத்தில்
தேங்கியுள்ளதாக, அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
சீ.ஐ.சீ.டீ தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் 400 கொள்கலன் தாங்கிகள் தேங்கியுள்ளது.
இந்த கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகளை விடுவிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.