அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தின் கீழ் எதிர்வரும்

10ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு வியாபாரியும் அரிசியை இறக்குமதி செய்தால், அவை     திருப்பி அனுப்பப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம், எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு காரணமாக, அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தின்படி, தனியார் துறையினர் இதுவரை 75,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர்.

இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள 75,000 மெற்றிக் தொன் அரிசியில் 32,000 மெற்றிக் தொன் பச்சரிசியும் 43,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் உள்ளடங்குகின்றன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி