இன்று, சிறுவர்கள் மீதான வன்கொடுமைக்கு எதிரான தேசிய தினமாகும்.
சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவது, சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் சிறுவர்களுக்கான நட்புச் சூழலை உருவாக்குவது ஆகியவை இதன் நோக்கமாகும்.
இதேவேளை, சிறுவர் மனநல சிகிச்சை நிலையங்களுக்கு வரும் சிறுவர்களில் பலர், புகையிலை தொடர்பான பல்வேறு பொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.