முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித
ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (03) முன்னிலையாகியுள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஆம் இணைப்பு
யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.
சுமார் 2 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.