நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதால்
வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் இரதல்லயிலிருந்து நானுஓயா வரையிலும், கம்பளை - நுவரெலியா பிரதான வீதியின் இறம்பொடையிலிருந்து நுவரெலியா வரையிலும் வாகனங்களைச் செலுத்தும் போது, முன்பக்க விளக்குகளை ஔிரவிட்டு வாகனத்தைச் செலுத்துமாறு, சாரதிகளிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலை நிலவுவதுடன், அப்பகுதி முழுவதிலும் இருண்ட நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.