2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்
பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று (02) ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, இன்று முதல் ஜனவரி 24ஆம் திகதி வரை, அனைத்துப் பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க, கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதன்படி இன்று முதல் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (03) முதல் 2024ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக்கான பரீட்சைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டின் புதிய வகுப்புகளுக்கான முதலாம் தவணை, ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.