இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இப்போது அதன் கட்டுப்பாடு அதன் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிட்டது.
இதனை விரைவில் மீட்டெடுக்கத் தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாக, பொலிஸ் தனது முகநூல் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகப்பட்டுள்ளது.
அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குள் அனுமதியின்றி ஒருவர் பிரவேசித்துள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த இணையத்தளம், வேறு வெளி தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வருவது அவதானிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.