இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்ட
நிலையில், கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான நியமனக் கடிதங்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (30) கையளிக்கப்பட்டன.
இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் நாளை (31) தமது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.