தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில்

பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக, தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக, குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன் புதிய அட்டை அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகுவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளும் அங்கு நிறுவப்படும் என்றும், திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட ரயில் ப்ரீபெய்ட் டிக்கெட்டை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி