கிறிஸ்மஸ் தினத்தையொட்டி, கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000
பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, சிறைக் கைதிகளுக்கு திறந்த வெளி பார்வையாளர்களை காண விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு, சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், நத்தார் பண்டிகைக்காக 389 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.