கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து
வைக்கும் நேரத்தை நீட்டிக்க, அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரையும், டிசம்பர் 27ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரையும் தாமரைக் கோபுரம் திறந்திருக்கும்.
மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை தாமரை கோபுரம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.