ஹட்டன், மல்லியப்புவ பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர்
காயமடைந்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, தேயிலை தோட்டத்தில் இன்று (21) கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து ஏற்படும் போது, பஸ்ஸில் 20 முதல் 25 பேர் வரை இருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பஸ்ஸில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் டிக்கோயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.