ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (தாமரை மொட்டுச் சின்னம்) புதிய தேசிய அமைப்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர்
டீ.வி.ஷானக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் இன்று (20) இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் அந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, புதிய கிராம தலைவர்கள் மற்றும் பிரதேச தலைவர்களை நியமிக்கும் அமைப்பாளர் பதவி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.