பத்தரமுல்லையில் உள்ள
மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான மதுபானசாலைக்கு மதுவரி திணைக்களம் சீல் வைத்துள்ளது.
வரி செலுத்தாத வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டமையே இதற்குக் காரணம்.
இது குறித்து கலால் திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் குழுவொன்று அதிரடியாக சோதனை நடத்தி சுமார் நூறு வெளிநாட்டு மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.
விசாரணை முடியும் வரை மதுபானசாலைக்கு சீல் வைக்குமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.