மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி
பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செட்டிபாளையத்தில் அம்பியூலன்ஸ் வண்டியும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளளது.
களுவாஞ்சிகுடியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் ஒன்று கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் மீது மோதியுள்ளது.
இதன்போது அம்பியூலன்ஸ் வண்டி சாரதியும் அதில் பயணித்த பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருமாக மூவருமாக காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்துக்குச் சொந்தமான இந்த அம்பியூலன்ஸ் களுவாஞ்சிகுடி பகுதிக்கு கடமை நிமித்தம் சென்றபோதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக பஸ்ஸில் பயணித்தவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.