கொரோனா வைரஸ் பரவல்
காலத்தில் ஒரு இனத்தையும் மதத்தையும் இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்க்ஷ அரசாங்கம் நடந்து கொண்டது.
இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(17) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
கோட்டாபய ராஜபக்க்ஷ அரசாங்கம் உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டுதல்களையும் மீறி செயற்பட்டது.
இந்நிலையில், உரிமைகள் மீறப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றார்.