10ஆவது பாராளுமன்றத்தின்
புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று (17) காலை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் இந்த இடம்பெற்றுள்ளது.
புதிய சபாநாயகர் பதவிக்கான பிரேரணை பிரதமர் ஹரினி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டபோது பிமல் ரத்நாயக்க அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
10ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வல இராஜினாமா செய்ததையடுத்து சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.
.