மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில்
இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (14) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்தே அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவரது ஒன்றரை வயது மகள் மற்றும் அவரது மனைவி காரில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர் பத்தரமுல்ல செத்சிரிபாயவில் உள்ள சமுர்த்தி பிரதான காரியாலயத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றுபவராவார்.
நுகேகொட குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.