மேல் மாகாண முன்னாள்
ஆளுநர் அசாத் சாலி கடந்த 2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து 75,000 ரூபா நட்டஈடு வழங்கவும் பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.