ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காமல் ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் வெற்றிடங்களுக்கு பெயர்களை அனுப்புவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (12) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவொன்றை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேசியப்பட்டியல் வழங்குவது தொடர்பான தங்களது கட்சியுடனான உடன்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்ற வேண்டுமெனவும் அதுவரை இடைக்காலத் தடையை விதிக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் தனது மனுவில் கேட்டுள்ளது.