அரசாங்கக் கணக்குக் குழு
அல்லது கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால நியமக் கணக்கின் இரண்டாம் நாள் விவாதத்தை ஆரம்பிப்பதற்கு முன், இன்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் கணக்காளர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க கூறினார்.
இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பதவியை ஆளும் கட்சி விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் கடந்த அரசாங்கத்தின்போது இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய வேண்டும் என்பதற்கே எனவும் தெரிவிக்கப்படுகிறது.