பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய காலத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தனக்குத் தெரியாது என பதிலளித்த பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கடுமையாக விமர்சிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.