(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற
காலநிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது.
அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அந்த வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புனாணை பகுதியில் ரயில் பாதையை குறுக்கறுத்து நீர் அதிகரித்துச் செல்வதால் மட்டக்களப்பு - கொழும்பு ரயில் சேவையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
