ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க டிசம்பர் மூன்றாம் வாரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரவை ஊடக செயலாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ அழைப்புக் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயத்துக்கு திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.