விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (23) மாலை 6.30 மணியளவில் அவர் மெகசின் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு அவரை மருத்துவர் பரிசோதித்தார்.
பின்னர் அந்தச் சிறைச்சாலையின் எச் பிரிவில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்துக்கிடமான வகையில் BMW ரக கார் நிறுத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.