ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

ஒரு மேதை, ஆனால் அவரால் மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்குத் தேவையான சிறந்த அணியை இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப மக்கள் பாடுபட வேண்டும் என்கிறார்.

மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

75 வருடங்களாக இந்த நாட்டில் ஆட்சியில் இருந்த எவரும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கிடைக்கும் என நினைக்கவில்லை எனவும், ஆனால் மக்கள் தமது குழுவுக்கு அந்த அதிகாரத்தை வழங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஓர் அரசியல் கட்சியாக மாறவில்லை, மக்கள் இயக்கமாக மாறிவிட்டது என்றும் அவர் கூறுகிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி