ஹமாஸ் அமைப்பின் தலைவர்

யாஹ்யா சின்வார், தெற்கு காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.

காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரில் இதுவரை இஸ்ரேல் பெற்ற மிகப்பெரிய வெற்றி இது என இஸ்ரேல் கூறுகிறது.
 
அவர் திட்டமிட்ட சிறப்புப் படை நடவடிக்கையில் கொல்லப்படவில்லை என்றும், தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் இஸ்ரேலியப் படைகளுடன்   மோதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இராணுவ வீரர்களை பாராட்டி, இது எவ்வளவு பெரிய வெற்றியாக இருந்தாலும், அது போரின் முடிவு அல்ல என்று கூறியுள்ளார்.
 
தீமையை நல்லது வெல்லும் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துக்காட்டியதாக இஸ்ரேல் பிரதமர் கூறுகிறார்.
 
பெஞ்சமின் நெதன்யாகு மேலும் கூறுகையில், ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது ஓராண்டு கால காசா போரின் முடிவைக் காட்டிலும் "இறுதியின் ஆரம்பம்" என்று கூறினார்.
 
சின்வார் 2017 ஆம் ஆண்டு முதல் காசா பகுதியில் ஹமாஸ் போராளிக் குழுவை வழிநடத்தி வருகிறார், மேலும் அவர் அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் குற்றம் சாட்டப்பட்டார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி